செய்திகள்

வீட்டை விட்டு மகன் விரட்டியதால் கலெக்டர் காலில் விழுந்து கதறிய மூதாட்டி

Published On 2018-10-01 11:40 GMT   |   Update On 2018-10-01 11:40 GMT
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மனு நீதிநாள் முகாமில் வீட்டை விட்டு மகன் விரட்டியதால் மூதாட்டி கலெக்டர் ரோகிணி காலில் விழுந்து கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:

சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 70). மனு நீதி நாளான இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சரஸ்வதி திடீரென கலெக்டர் காலில் விழுந்து கதறினார். பின்னர் அவர் கூறியதாவது:-

நான் கருங்கல்பட்டியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். எனது கணவர் இறந்து விட்ட நிலையில் எனது மகனும், மருமகளும் வீட்டை விட்டு துரத்தி விட்டனர்.

நான் எந்த ஆதரவும் இல்லாமல் அனாதையாக இருக்கிறேன். இது குறித்து எனது மகன், மருமகளிடம் விசாரித்J விட்டு என்னை ஒரு ஆதரவற்ற இல்லத்தில் சேர்த்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.
Tags:    

Similar News