செய்திகள்

விமான பயணியிடம் ரூ.60 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்

Published On 2018-10-01 08:01 GMT   |   Update On 2018-10-01 08:01 GMT
சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.60 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:

இன்று காலை சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்யும் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, வெளிநாட்டில் வாழும் இந்திய வம்சா வழி பயணி ஒருவர் ரூ.60 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதற்குரிய முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லை.

எனவே அந்த அமெரிக்க டாலர் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை நடைபெறுகிறது. #tamilnews
Tags:    

Similar News