செய்திகள்

நடத்தையில் சந்தேகம்- அக்காளை கத்தியால் குத்தி கொன்ற தம்பி

Published On 2018-09-30 11:06 GMT   |   Update On 2018-09-30 11:06 GMT
தேனி அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு சகோதரியை தம்பி கத்தியால் குத்திக்கொன்றார்.

தேனி:

தேனி அருகே கோட்டூர் காளியம்மன கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு ஜெயந்தி மாலா (வயது 25) என்ற மகளும், செல்வக்குமார் (23) என்ற மகனும் உள்ளனர். ஜெயந்தி மாலாவுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தை கருப்பையா வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

இவரது தம்பி செல்வக்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

கணவரை பிரிந்து வாழ்ந்த ஜெயந்தி மாலா நடத்தையில் செல்வக்குமார் மற்றும் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்றும் இது குறித்து வாக்குவாதம் நடத்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வக்குமார் மற்றும் அவரது பெற்றோர் அருகில் இருந்த கத்தியை எடுத்து ஜெயந்தி மாலாவை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஜெயந்தி மாலா பலியானார். இது குறித்து கோட்டூர் வி.ஏ.ஓ. தங்கமுத்து அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பையா மற்றும் பேச்சியம்மாளை கைது செய்தனர். தப்பி ஓடிய செல்வக்குமாரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News