செய்திகள்

ஆற்காட்டில் பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

Published On 2018-09-28 17:14 GMT   |   Update On 2018-09-28 17:14 GMT
ஹெல்மெட் அணிந்து வந்து பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆற்காடு:

ஆற்காடு தோப்புக்கானா மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சோழன். இவரது மனைவி சாந்தி (வயது 55). இவர், மளிகை பொருட்கள் வாங்க வீட்டின் எதிரே உள்ள மளிகை கடைக்கு சென்றார். அப்போது, ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த ஒரு வாலிபர், சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றான்.

இதுப்பற்றி ஆற்காடு டவுன் போலீசில் சாந்தி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து செயின் பறித்த கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆற்காடு, ராணிப்பேட்டை பகுதியில் செயின் பறிப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்கள் பாதுகாப்புடன் வீதியில் நடக்க முடியவில்லை. கொள்ளையர்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News