செய்திகள்
நன்னிலம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த வாலிபர் பலி
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த வாலிபர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சர்க்கரை மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ரஞ்சித் (வயது 20). விவசாய தொழிலாளி. இந்த நிலையில் நேற்று மாலை வடபாதிமங்கலம் புனவாசல் கிராமத்தில் உள்ள தனது அக்காள் அன்பரசி வீட்டுக்கு ரஞ்சித் புறப்பட்டு சென்றார்,
அப்போது அன்பரசி வீட்டு அருகே சென்ற போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பி கிடந்துள்ளது. இதை கவனிக்காமல் ரஞ்சித் மின்கம்பியை மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரஞ்சித் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி வடபாதி மங்கலம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சுகந்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருதிறார்.