செய்திகள்

மஸ்கட்டில் இருந்து ரூ.15 லட்சம் தங்கம் கடத்தல் - பெண்ணிடம் விசாரணை

Published On 2018-09-27 09:39 GMT   |   Update On 2018-09-27 09:39 GMT
சென்னை விமான நிலையத்தில் மஸ்கட்டில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் தங்கத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சென்னை:

மஸ்கட்டில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் சென்னை வந்தது.

விமானத்தில் வந்த சுபாஷினி என்ற பெண்ணை அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அவரது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் உள்ளாடையில் இருந்து 4 தங்க கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News