செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் விளம்பர பதாகைகள் அகற்றம்

Published On 2018-09-22 16:49 GMT   |   Update On 2018-09-22 16:49 GMT
தினத்தந்தி செய்தி எதிரொலியாக இரவோடு இரவாக ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் உள்ள பதாகைகள் அகற்றப்பட்டன.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி தினத்தந்தியில் நேற்று முன் தினம் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவோடு இரவாக ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் உள்ள பதாகைகள் அகற்றப்பட்டன.

இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக நன்றி தெரி வித்தனர். மேலும் சாலை ஓரங்களில் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கடைக்காரர் களால் ரோட்டிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

தீபாவளி பண்டிகை முடியும் வரை கடை வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News