செய்திகள்

சித்தாலப்பாக்கத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

Published On 2018-09-22 10:28 GMT   |   Update On 2018-09-22 10:28 GMT
சித்தாலப்பாக்கத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேளச்சேரி:

சித்தாலப்பாக்கம் ஜெயா நகரை சேர்ந்தவர் மோகன சுந்தரவல்லி (66). இவர் நேற்று மாலை சித்தாலப்பாக்கம் மெயின் ரோட்டில் நடந்து சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர்.

இதுதொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News