செய்திகள்

3 பேர் கற்பழித்ததில் கர்ப்பம் - மனநலம் பாதித்த சிறுமி காப்பகத்தில் ஒப்படைப்பு

Published On 2018-09-19 09:09 GMT   |   Update On 2018-09-19 09:09 GMT
கூடுவாஞ்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை 3 பேர் சேர்ந்து கற்பழித்த வழக்கில் கர்ப்பமாகிய சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
கூடுவாஞ்சேரி:

கூடுவாஞ்சேரியை அடுத்த அருங்கால் கிராமத்தை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பரமசிவம்(65) காரணை புதுச்சேரியை சேர்ந்த சங்கர்(45), சிதம்பரம்(40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பரமசிவத்தின் உறவினர் ஒருவரது வீட்டுக்கு இரும்பு கூரை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதில் சங்கரும், சிதம்பரமும், வேலை பார்த்தனர். அப்போது அங்கு வந்த சிறுமியை பரமசிவம் மிரட்டி கற்பழித்து உள்ளார். இதனை பார்த்த சங்கரும், சிதம்பரமும் இது பற்றி வெளியில் சொல்லாமல் இருக்க தங்களது ஆசைக்கும் சிறுமியை இணங்க வைக்கும் படி கூறி உல்லாசமாக இருந்து இருக்கிறார்கள். கடந்த 3 மாதத்துக்கு மேலாக சிறுமிக்கு இந்த கொடுமை நடந்துள்ளது.

தற்போது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் சிறுமி மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதால் கர்ப்பத்தை கலைப்பதா? அல்லது வேறு எந்த முடிவு எடுப்பது என்று டாக்டர்கள் குழப்பம் அடைந்து இருக்கிறார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே சிறுமியை கற்பழித்த பரமசிவம் உள்பட 3 பேரையும் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News