செய்திகள்

கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் - வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய கோரிக்கை

Published On 2018-09-18 11:34 GMT   |   Update On 2018-09-18 11:34 GMT
வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய கோரி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். #PropertyTax

புதுச்சேரி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அரியாங்குப்பம் தொகுதி குழு சார்பில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி செயலாளர் பூபதி தலைமை தாங்கினார். துணை செயலாளர் கண்ணன், பொருளாளர் முருகன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

மாநில துணை செய லாளர் அபிஷேகம், மாநில நிர்வாக குழு சரளா ஆகியோர் கண்டன உரையாற்றினர். தொகுதி நிர்வாகிகள் பச்சையப்பன் இந்து, பாலசுந்தரம், லெனின், ராஜி, வசந்தா, முத்துகுமார், கணேசன், செல்வராஜி, தினேஷ், ஈஸ்வரன் சுகதேவ், ரமணி, ராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதுவையில் வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், குடிநீர் கட்டணம் மற்றும் மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும், குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும், வீடு இல்லாத மக்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட் டம் நடைபெற்றது.

Tags:    

Similar News