செய்திகள்
தியாகராய நகரில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி மீட்பு- தனியார் நிறுவன ஊழியர் கைது
தியாகராய நகரில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை போலீசார் மீட்டனர். மாணவியை கடத்திய தனியார் நிறுவன ஊழியர் சோக்சோ சட்டத்தல் கைது செய்யப்பட்டார்.
சென்னை:
தி.நகர் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜூ. இவரது மகள் விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 10-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அசோக் நகர் மகளிர் போலிசில் ராஜூ புகார் அளித்தார். மாணவியை வாலிபர் ஒருவர் காஞ்சீபுரம் அருகே கடத்தி சென்றது தெரியவந்தது. உடனடியாக மாணவியை மீட்ட போலீசார் மாணவியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த தி.நகர் கக்கன் காலனியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அசோக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.