செய்திகள்

உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2018-09-13 16:58 GMT   |   Update On 2018-09-13 16:58 GMT
உசிலம்பட்டி பகுதியில் கலெக்டர் நடராஜன், அங்கன்வாடி மையம், கண்மாய், சத்துணவு கூடங்கள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நகராட்சி குப்பை கிடங்கு திடக்கழிவு மேலாண்மையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கலெக்டர் நடராஜன், அங்கன்வாடி மையம், கண்மாய், சத்துணவு கூடங்கள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நகராட்சி குப்பை கிடங்கு திடக்கழிவு மேலாண்மையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனை பிரசவ வார்டில் கலெக்டர் நடராஜன் ஆய்வு பணி மேற்கொண்டார். வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மருத்துவமனை இணை இயக்குநர் பூமிநாதன், மருத்துவர்கள் ராதாமணி, யோகவதி, பாரதி நிலையமருத்துவர் ரமாஸ்ரீ, உசிலம்பட்டி வட்டாட்சியர் நவநீத கிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் பரமசிவம், இளங்கோவன், பொறியாளர் கண்ணன், நகராட்சி பொறியாளர் அழகேஸ்வரி, சுகாதார பணியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் உசிலம்பட்டி கண்மாய், செட்டியபட்டி அங்கன்வாடிமையம், பள்ளிக்கூடம், சத்துணவு மையங்கள், உசிலம்பட்டி நகராட்சி திடக்கழிவு மேலாண்மையை பார்வை யிட்டு உரிய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News