செய்திகள்
அம்மாபேட்டை பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் அவதி
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவும் பகலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.
இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் எந்த வேலையையும் முழுமையாக செய்ய முடியவில்லை.பள்ளி மாணவர்கள் எழுத படிக்க முடியவில்லை.கொசுக்கடியில் இரவு நேரங்களில் குழந்தைகள் தூங்கமுடியவில்லை எனவும் தொழில் மற்றும் விவசாயம் பாதிக்க பட்டு உள்ளது.
எனவே உடனடியாக அறிவிக்கப்படாத மின்வெட்டை சீர் செய்து தடையில்லா மின் வினியோகம் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.