செய்திகள்

நொய்யல் காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம்

Published On 2018-09-09 16:21 GMT   |   Update On 2018-09-09 16:21 GMT
கரூர் மாவட்ட நொய்யல் அருகே காவிரி ஆற்றின் நடு பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்ட நொய்யல் அருகே காவிரி ஆற்றின் நடு பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தண்ணீரில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து கோம்புப்பா ளையம் கிராம நிர்வாக அலு வலர் சரண்யா வேலாயுதம் பாளையம் போலீசுக்கு தக வல் தெரிவித்தார். 
மேலும் தீய ணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காவிரி ஆற்றில் கிடந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இது குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக் டர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து, பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த நபருக்கு சுமார் 50 வயது இருக்கலாம் எனவும், அவர் சுமார் 5 1/2 உயரத்தில் கருப்பு நிற டீ-சர்ட் மற்றும் சாம்பல் நிற அரைக்கால் டவுசர் அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News