செய்திகள்

விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடத்த கட்சி பிரமுகர்கள் எஸ்.பி.யிடம் மனு

Published On 2018-09-07 21:53 IST   |   Update On 2018-09-07 21:53:00 IST
ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைத்தல் தொடர்பாகவும், ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த வலியுறுத்தியும் அனைத்து கட்சி சார்பில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது. #VinayagarChaturthi
ஈரோடு:

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது.-

ஈரோடு மாவட்டத்தில் வரும் 13- ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா இந்து இயக்கங்கள் சார்பில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் இந்து இயக்கங்கள் சார்பில் வைக்கப்படும் சிலைகள் அவர்கள் சார்பில் நடத்தப்படும் ஊர்வலங்களில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் போக்குவரத்து பாதிக்கும் இடங்களில் சிலை வைக்க அனுமதிக்கக் கூடாது.

கூம்பு வடிவ ஒலி பெருக்கி வைக்க அனுமதிக்கக் கூடாது. வன்முறையை தூண்டும் ஒலி முழக்கங்களை அனுமதிக்கக் கூடாது. பிறவழி பாட்டுத்தலங்கள் உள்ள இடங்களில் ஊர்வலத்தை அனுமதிக்கக் கூடாது.

எளிதில் கரையும் களிமண் போன்றவற்றால் செய்யப்படும் சிலைகளை தவிர நீர்நிலைகளை மாசுபடுத்தும் ரசாயனத்தால் ஆன சிலைகளை அனுமதிக்கக் கூடாது. சிலைகள் ஊர்வலத்தில் அரசியல் கட்சிக் கொடிகள் அமைப்பு கொடிகள் அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

திராவிடர் கழகம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தலித் விடுதலை கட்சி போன்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். #VinayagarChaturthi
Tags:    

Similar News