செய்திகள்

லஞ்சம் வாங்கிய வழக்கில் சப்-இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு ஜெயில்

Published On 2018-09-05 15:54 GMT   |   Update On 2018-09-05 15:54 GMT
லஞ்சம் வாங்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிவகங்கை:

மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 2.5.2011 அன்று தன்னுடைய காரில் காரைக்குடி அருகே உள்ள புதுவயலுக்கு சென்றார். அப்போது கார் பழுதானதால் அங்கேயே விட்டுவிட்டு ஊருக்கு திரும்பிச் சென்றுவிட்டார். பின்னர் 10 நாட்கள் கழித்து புதுவயல் சென்று பார்த்தபோது, அந்த காரை சாக்கோட்டை போலீசார் கைப்பற்றி சென்றது தெரிந்தது.

இதனால் முருகன் அந்த காரை எடுக்க போலீஸ் நிலையம் சென்றபோது, அங்கிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சி ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனை யடுத்து காமாட்சியிடம் ரசாயனம் தடவிய பணத்தை முருகன் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சி மற்றும் போலீஸ்காரர் சிவ முருகன் ஆகியோரை கைதுசெய்தனர்.

மேலும் இதுதொடர்பான வழக்கு சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி சசிரேகா, குற்றம்சாட்டப்பட்ட காமாட்சிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். சிவமுருகன் விடுதலை செய்யப்பட்டார். 
Tags:    

Similar News