செய்திகள்

லாட்ஜில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2018-09-05 10:12 GMT   |   Update On 2018-09-05 10:12 GMT
கோவை பெரியகடை வீதியில் உள்ள லாட்ஜில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

மதுரை குன்னத்தூரை சேர்ந்தவர் சடயன்(வயது 23). எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார். வேலை வி‌ஷயமாக கடந்த 28-ந் தேதி கோவை வந்த இவர் பெரியகடை வீதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கியிந்தார்.

சம்பவத்தன்று வெகுநேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சடயன் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து உக்கடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News