செய்திகள்
கடலூரில் ஐஸ் கட்டி இறக்கியபோது தவறி விழுந்து தொழிலாளி பலி
கடலூர் தனியார் ஐஸ் தொழிற்சாலையில் ஐஸ் கட்டிகளை இறக்கி கொண்டிருந்த போது தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
கடலூர்:
கடலூர் முதுநகர் காரைக்காடு அங்காளம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சீனுவாசன் (வயது 45). தொழிலாளியான இவர், சிப்காட்டில் உள்ள தனியார் ஐஸ் தொழிற்சாலையில் ஐஸ் கட்டிகளை இறக்கி கொண்டிருந்தார்.
அப்போது அவர், திடீரென நிலைதடுமாறி தவறி கீழே விழுந்து இறந்தார். இது குறித்து அவரது மகன் சீத்தாராமன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.