செய்திகள்

திருச்சியில் கார் மோதி பஸ்சுக்காக நின்ற 3 பெண்கள் பலி - பொதுப்பணிதுறை அதிகாரி ஓட்டம்

Published On 2018-09-03 14:47 GMT   |   Update On 2018-09-03 17:24 GMT
திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே உள்ள சிறுகமணியில் பொதுப்பணித்துறை அதிகாரி சென்ற கார் மோதி பேருந்துக்காக நின்ற 3 பெண்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Trichy
திருச்சி:

திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே உள்ள சிறுகமணி அக்ரஹாரம் பேருந்து நிலையத்தில் இன்று மாலை பேருந்துக்காக பலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வேகமாக வந்த கார் நின்று கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதனை அடுத்து, காரை ஓட்டி வந்த நபர் ஓட்டம் பிடித்தார்.

விபத்தில் 3 கட்டிட தொழிலாளர் பெண்கள் பலியானதாகவும், 4 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் தயாளுகுமார் குடிபோதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். 
Tags:    

Similar News