செய்திகள்

சான்றிதழ் வழங்குவதில் தாமதம் - இ-சேவை மையத்தில் பொதுமக்கள் முற்றுகை

Published On 2018-08-30 11:02 GMT   |   Update On 2018-08-30 11:02 GMT
திண்டுக்கல்லில் சான்றிதழ் வழங்க தாமதம் ஆவதால் இ-சேவை மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் யூனியன் அலுவலகத்தில் இ-சேவை மையம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் பட்டா, சிட்டா அடங்கல், ஜாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், ரேசன் ஸ்மார்ட் கார்டு ஆகியவை பெற்று வந்தனர். கடந்த சில நாட்களாக இங்கு விண்ணப்பித்தால் அதிக நேரம் தாமதம் ஆகிறது.

அதோடு சர்வர் வேலை செய்யவில்லை என்று கூறி இழுத்தடிக்கும் நிலை உருவானது. இதனால் பொதுமக்கள் ஆதங்கப்பட்டனர்.

இன்று காலை ஏராளமானோர் இ-சேவை மையத்துக்கு வந்தனர். சான்றிதழ் தாமதமாக வழங்கப்படும் என்று தெரிய வந்ததால் ஆத்திரமடைந்தனர். அவர்கள் யூனியன் அலுவலகம் முன்பு திடீரென முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் களைந்து சென்றனர்.

Tags:    

Similar News