செய்திகள்

வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே மோதல்- ஒருவர் கைது

Published On 2018-08-29 11:33 GMT   |   Update On 2018-08-29 11:33 GMT
நிலப்பிரச்சினையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 34). இவருடைய சித்தப்பா தமிழ்மணி (62). தன்னுடைய நிலத்தை வேதாரண்யம் பகுதி முதலியார்தோப்பைச் சேர்ந்த தர்மராஜ் (45) என்பவரிடம் விலைபேசி முன்பணம் வாங்கியுள்ளார்.

பாக்கி பணத்தை கொடுத்து தர்மராஜ் நிலத்தை பதிவு செய்து கொள்ளவில்லை. இதனால் முன்பணத்தை தர்மராஜனிடம் திருப்பி கொடுப்பதற்காக தமிழ்மணி, பிரபாகரன் மற்றும் சிலர் சென்றுள்ளனர்.

அப்போது தமிழ்மணி தரப்பிற்கும் தர்மராஜ் தரப்பினருக்கும் தாகராறு ஏற்பட்டதில் தர்மராஜ் கத்தியால் பிரபாகரனை வெட்டியுள்ளார்.

தர்மராஜனை, பிரபாகரன், தமிழ்மணி, சேகர், ஆனந்தன் ஆகிய நால்வரும் சேர்ந்து கம்பால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பிரபாகரன், தர்மராஜ் இருவரையும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் தர்மராஜ் மீதும், தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில் தமிழ்மணி, சேகர், ஆனந்தன், பிரபாகரன் ஆகிய 4 பேர் மீதும் தனித்தனியே வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் அகோரம் வழக்குப்பதிவு செய்தார். இதில் தமிழ்மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News