செய்திகள்
அரக்கோணம் அருகே சாராயம் விற்ற பெண் கைது
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே அனுமதியின்றி சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 60 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தண்டலம் பகுதியில் சாராயம் விற்பதாக அரக்கோணம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லூயிசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையிலான போலீசார் இன்று காலை தண்டலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சாராயம் விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பிரேமா (வயது38) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 60 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரக்கோணம் அடுத்த தண்டலம் பகுதியில் சாராயம் விற்பதாக அரக்கோணம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லூயிசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையிலான போலீசார் இன்று காலை தண்டலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சாராயம் விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பிரேமா (வயது38) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 60 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.