செய்திகள்

ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க சொல்வதா? சுப்பிரமணிய சாமிக்கு அமைச்சர் பாண்டியராஜன் கண்டனம்

Published On 2018-08-29 10:16 GMT   |   Update On 2018-08-29 10:16 GMT
ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என சுப்பிரமணிய சாமி கூறியதற்கு தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். #SubramanianSwamy #MaFoiPandiarajan
சென்னை:

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்து வழக்கம்போல் சர்ச்சையை ஏற்படுத்த, அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவியத் தொடங்கி உள்ளன.

சுப்பிரமணிய சாமியின் இந்த கருத்துக்கு தமிழக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆவடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-



சுப்பிரமணிய சாமியின் கருத்துக்கள் பாஜகவின் கருத்துக்கள் அல்ல என நேற்று கூறியிருக்கிறார்கள். எனவே, இதற்கும் மறுப்பு வரும் என நினைக்கிறோம். எனவே, இதை பாஜக கருத்தாக பார்க்கவில்லை. சுப்பிரமணிய சாமியின் தனிப்பட்ட கருத்து. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவருடைய கருத்து ஏற்புடையது அல்ல. எந்த சூழ்நிலையிலும் அந்த மாதிரி இழிநிலை இந்தியாவுக்கு வரும் என நாங்கள் நினைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #SubramanianSwamy #MaFoiPandiarajan

Tags:    

Similar News