செய்திகள்

ராஜபாளையத்தில் தொழிலாளிக்கு கத்திக்குத்து

Published On 2018-08-25 10:18 GMT   |   Update On 2018-08-25 10:18 GMT
ராஜபாளையத்தில் முன் விரோத தகராறில் தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது.

ராஜபாளையம்:

ராஜபாளையம் தோழ ராயபட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 32) கூலித்தொழிலாளி. இவருக் கும், கீழ ஆவரம்பட்டியைச் சேர்ந்த கடல்கனி (50) என் பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று பஞ்சு மில் மார்க்கெட் அருகே பால்பாண்டி நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது கடல்கனியின் மருமகன் ராஜூ (26) அங்கு வந்தார். அவர், பால் பாண்டியை வழிமறித்து தகராறு செய்தார்.

இதில் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் ஆத்திரம் அடைந்த ராஜூ, மறைத்து வைத்திருந்த கத்தியால் பால் பாண்டியை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

காயம் அடைந்த பால் பாண்டி சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை யங்கோட்டை அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு செல் லப்பட்டார்.

இது குறித்து பால்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப் பதிவு செய்து ராஜூவை தேடி வருகிறார்.

Tags:    

Similar News