செய்திகள்

அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டது

Published On 2018-08-23 16:06 GMT   |   Update On 2018-08-23 16:06 GMT
வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளான கேரளா மாநில மக்களுக்கு அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.13 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கலெக்டர் விஜயலட்சுமி 2 லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார்.
அரியலூர்:

வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளான கேரளா மாநில மக்களுக்கு அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.13 லட்சம் மதிப்புள்ள உடைகள், போர்வைகள், மெழுகுவர்த்தி, பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள், மருந்து பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களான நிவாரண பொருட்களை கலெக்டர் விஜயலட்சுமி 2 லாரிகள் மூலம் அனுப்பி வைத் தார். 

அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், மாவட்ட வழங்கல் அதிகாரி ஜெயா, தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) விக்டோரியா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். #keralarain
Tags:    

Similar News