செய்திகள்

தா.பேட்டை அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து மாணவன் பலி

Published On 2018-08-23 13:17 GMT   |   Update On 2018-08-23 13:17 GMT
ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தா.பேட்டை:

தா.பேட்டை அடுத்த ஜெம்புநாதபுரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். கூலிதொழிலாளி. இவரது மகன் கிஷோர் (13) அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் விளையாடசென்றதாக கூறப்படுகிறது. 

அப்போது ஆதனூர்சின்ன ஏரியில் உள்ள மரக்கன்றுகளுக்கு மினி ஆட்டோவில் தண்ணீர்தொட்டி வைத்து அதன்மூலம் தண்ணீர் ஊற்றி கொண்டு சென்றுள்ளதாக தெரிகிறது. அப்போது ஆட்டோவின் பின் புறத்தில் சிறுவன் கிஷோர் ஏறியபோது, எதிர்பாராதவிதமாக ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்தார். 

இதில் சிறுவன் கிஷோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று சிறுவனை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் கிஷோர் பரிதாபமாக இறந்தான். 

இது குறித்து தகவல் அறிந்த ஜெம்புநாதபுரம் போலீசார் சிறுவன் கிஷோர் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குபதிந்து ஆட்டோ டிரைவர் தினேஷ்சிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News