செய்திகள்

சி.டி. மணி - 17 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2018-08-23 09:18 GMT   |   Update On 2018-08-23 09:18 GMT
தேனாம்பேட்டையை சேர்ந்த சி.டி. மணி, 17 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஒருவருடம் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
சென்னை:

சென்னை நகரில் நடைபெறும் குற்ற செயல்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

ரவுடிகளும், வழிப்பறி செய்பவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. ரவுடிகள் கைது வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.

தேனாம்பேட்டையை சேர்ந்த ரவுடி சி.டி.மணி. போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர் மீது 8 கொலை வழக்கு உள்பட 31 வழக்குகள் உள்ளன. இவருடைய கூட்டாளிகள், அரி, அரிகரன் ஆகியோர் கானத்தூர் சாலையில் போலீசாரிடம் சிக்கினார்கள்.

திருவான்மியூரில் தனசேகரன், பாரதி, செந்தமிழ்செல்வன், ராஜா ஆகிய 4 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

இவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஒருவருடம் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி சென்னையில் ஒரே நாளில் 18 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. #GoondasAct

Tags:    

Similar News