செய்திகள்

சேதமடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும்- கிராம மக்கள் கோரிக்கை

Published On 2018-08-20 12:04 GMT   |   Update On 2018-08-20 12:04 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சேதமடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, நூர்சாகிபுரம் ரெயில்வே கடவுப்பாதையை சுரங்கப்பாதையாக மாற்றி அமைக்கும் பணி கடந்த 15-ந் தேதி தொடங்கியது.

இந்தப்பணியின் போது, காமராஜர் நகர், இடைய பொட்டல்பட்டி, அருந்ததியர் காலனி, காளீஸ்வரி காலனி, நூர்சாகிபுரம், அழகு தெய்வேந்திரபுரம், பால சுப்பிரமணியாபுரம், துலுக்கன்குளம், கங்காகுளம், கன்னார்பட்டி காலனி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டக்குழாய் உடைந்துள்ளதால் குடிதண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

ரெயில்வே சுரங்கப்பணி தொடங்கும் போது மாற்றுப்பாதை அமைக்காமல் விட்டதால் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் குடி தண்ணீர் குழாயும் உடைந்து கிடைக்காமல் போனதால் பெரும் இன்னலுக்கு மேற்கண்ட கிராமத்தினர் ஆளாகி உள்ளனர்.

எனவே, சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவடையும் காலம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் இடத்திற்கு மேற்கு புறம் உள்ள ரெயில்வே மழை நீர் கடக்கு சிறிய பாலம் வழியாக குழாயை கொண்டு சென்று குடிதண்ணீர் வழங்கவும், மாற்றுப்பாதை அமைத்து பள்ளி நேரங்களிலாவது அரசு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News