செய்திகள்

பெண்ணாடம் அருகே தீயில் கருகி பெண் பலி

Published On 2018-08-14 10:37 GMT   |   Update On 2018-08-14 10:37 GMT
பெண்ணாடம் அருகே தீயில் கருகி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த கொத்தட்டை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணபிரான் (வயது37). தொழிலாளி

இவரது மனைவி இந்தி ராணி(32). இவர்களுக்கு ஹரிப்ரியா (7) என்ற மகளும், விஷ்னு பிரசாந்த் (5) என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு இந்திராணி வீட்டில் உள்ள மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து இந்திராணியின் உடலில் தீப்பிடித்தது. அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த கண்ணபிரான் ஓடி சென்று இந்தி ராணியின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றார். அப்போது கண்ணபிரானின் உடலிலும் தீப்பற்றியது. கணவன்- மனனவி 2 பேரும் தீ விபத்தில் சிக்கினர். வலி தாங்க முடியாமல் அவர்கள் அலறினார்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அனைத்து கண்ணபிரானையும் அவரது மனைவி இந்திராணியையும் மீட்டனர். இருப்பினும் அவர்கள் 2 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

பின்னர் அவர்களை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கண்ணபிரானையும், அவரது மனைவி இந்திராணியையும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு இந்திராணி பரிதாபமாக இறந்தார். கண்ணபிரானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News