செய்திகள்
சிறுமி கற்பழிப்பு வழக்கில் 17 பேர் ஜாமீன் கோரி மனு - இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு
சென்னை அயனாவரம் சிறுமி கற்பழிப்பு வழக்கில் 17 பேர் ஜாமீன் கோரிய மனு தொடர்பாக இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய மகளிர் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #ChennaiGirlHarassment #POCSOAct
சென்னை:
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் 17 பேரும் ஜாமீன் கோரி சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, இதுதொடர்பாக அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். பின்னர், மனு மீதான விசாரணையை 16-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #ChennaiGirlHarassment #POCSOAct
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் 17 பேரும் ஜாமீன் கோரி சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, இதுதொடர்பாக அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். பின்னர், மனு மீதான விசாரணையை 16-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #ChennaiGirlHarassment #POCSOAct