செய்திகள்
புளியங்குடியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி
புளியங்குடியில் பீஸ் கேரியலை மாற்றிக் கொண்டிருந்த விவசாயி மீது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் கருகி பலியானார்.
கடையநல்லூர்:
புளியங்குடி சிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாதுரை (வயது 37). இவருக்கு சொந்தமான தோட்டம் கோட்டமலை அருகே உள்ளது. இந்நிலையில் நேற்று அய்யாதுரை தோட்டத்திற்கு சென்றார். அங்கு தண்ணீர் பாய்ச்சுக் கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தடைபட்டது.
இதையடுத்து அவர் பீஸ் கேரியலை மாற்றிக் கொண்டிருந்தார். இதில் எதிர்பாராமல் அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதனால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து புளியங்குடி போலீசார் பலியான அய்யாதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துமனைக்க அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.