செய்திகள்

மானாமதுரை பகுதியில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த மாட்டோம் - வணிகர் சங்கத்தினர் உறுதி

Published On 2018-08-11 10:21 GMT   |   Update On 2018-08-11 10:21 GMT
மானாமதுரை பேரூராட்சியில் கடந்த 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தடை செய்யப்பட்டு உள்ளது.

மானாமதுரை:

மானாமதுரை பேரூராட்சியில் கடந்த 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தடை செய்யப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது தலைமையில் பணியாளர்கள் வாரசந்தை, புதிய பஸ் நிலையம், மெயின் பஜார்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

மானாமதுரை வர்த்தக சங்கத்தினை அழைத்து பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றியும் தீமைகள் பற்றியும் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

இதில் சிவசங்கை மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் பாலகுருசாமி தலைமையில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

மானாமதுரை பள்ளிகளிலும் மாணவர்கள் வீடுகளில் யாரும் பயன் படுத்தக்கூடாது என தெரிவிக்கும்படி பிரசாரம் நடந்தது.

Tags:    

Similar News