செய்திகள்

திருச்சியில் கஞ்சா விற்ற ரவுடி உட்பட 2 பேர் கைது

Published On 2018-08-07 11:10 GMT   |   Update On 2018-08-07 11:10 GMT
திருச்சியில் கஞ்சா விற்ற ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:

திருச்சி பாலக்கரை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செந்தண்ணீர்புரம் ரெயில்வே பாலம் அருகே இருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

அவர்கள் பாலக்கரை சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறைரோடு பகுதியை சேர்ந்த துப்பாக்கி ரமேஷ் (வயது 48), டேனியல் விக்கி (22) என்பது தெரியவந்தது. இதில் துப்பாக்கி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதும், அவர் பிரபல ரவுடி என்பதும் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா, ரூ.200 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். #Tamilnews

Tags:    

Similar News