செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ. மரணம் - எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். இரங்கல்

Published On 2018-08-06 08:18 GMT   |   Update On 2018-08-06 08:18 GMT
பேரணாம்பட்டு அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கனகதாரா மறைவிற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #TNCM #OPS
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

வேலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளரும், பேரணாம் பட்டு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கனகதாரா மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு அன்புச் சகோதரி கனகதாராவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர். #TNCM #OPS

Tags:    

Similar News