செய்திகள்

மறைந்த எம்.எல்.ஏ., போஸ் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் அஞ்சலி

Published On 2018-08-02 02:18 GMT   |   Update On 2018-08-02 02:18 GMT
மறைந்த திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே.போஸின் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் இன்று மதியம் நேரில் அஞ்சலி செலுத்தவிருக்கின்றனர். #ADMK #MLA #AKBose
மதுரை:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ.வான ஏ.கே.போஸ் (69) மாரடைப்பால் காலமானார். மதுரை ஜெய்ஹிந்துபுரம், ஜீவாநகரில் வசித்து வந்த இவருக்கு நேற்று நள்ளிரவு தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது, வழியிலேயே அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மறைந்த போஸின் உடலுக்கு மதுரை ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகரில் இன்று மாலை இறுதிச்சடங்கு நடக்கிறது. அதற்கு முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிற்பகல் 1 மணியளவில் போஸ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தவிருக்கிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களும், போஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தவிருக்கின்றனர்.



திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானவர் என்பது குறிப்பிடத்க்கது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.எம்.சீனிவேலு வெற்றி பெற்றார். ஆனால் தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே அவர் உடல்நலக்குறைவால் காலமானார். பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக களமிறங்கிய ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. #ADMK #MLA #AKBose

Tags:    

Similar News