செய்திகள்

திண்டிவனம் அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்து விஜயகுமார் நீக்கம்

Published On 2018-08-03 08:02 GMT   |   Update On 2018-08-03 08:02 GMT
கூடுதல் மார்க் வழங்கிய விவகாரம் தொடர்பாக திண்டிவனம் அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்து விஜயகுமார் நீக்கப்பட்டுள்ளார். #AnnaUniversity #RevalutaionScam
சென்னை:

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் அனைத்துப் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதம் நடந்த செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் கூடுதல் மார்க் பெற லஞ்சம் கொடுத்துள்ளதாக புகார் எழுந்தது.

மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ரூ.10 ஆயிரம் பெற்று அவர்களுக்கு கூடுதல் மார்க் வழங்கியதாக, அப்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும் தற்போதைய ஐடி துறை பேராசிரியையுமான உமா மற்றும் மண்டல அதிகாரிகள் விஜயகுமார், சிவகுமார் மற்றும் விடைத்தாள் திருத்திய 7 ஆசிரியர்கள் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்து விஜயகுமார் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரம் தொடர்பாக இதுவரை 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #AnnaUniversity  #RevalutaionScam
Tags:    

Similar News