செய்திகள்

சமையல் கியாஸ் விலை ரூ.35.50 உயர்ந்தது

Published On 2018-08-03 06:40 GMT   |   Update On 2018-08-03 06:40 GMT
சமையல் கியாஸ் சிலிண்டர்களை மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. வீடுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்கள் தற்போது ரூ.35.50 காசு உயர்ந்துள்ளது. #CookingGas
சென்னை:

சமையல் கியாஸ் சிலிண்டர்களை மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது.

ஜூலை மாதம் 31-ந்தேதி வரை வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை ரூ.770.50 காசுகளாக இருந்தது. இந்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி முதல் ரூ.806 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்கள் ரூ.35.50 காசு உயர்ந்துள்ளது. இந்த மாதம் முதல் பதிவு செய்யப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மானிய தொகையாக சிலிண்டர் வழங்குவோரின் வங்கி கணக்கில் ரூ.319.58 செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மானியம் இல்லாமல் வர்த்தக ரீதியில் விற்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.1,427 ஆக இருந்தது. இந்த மாதம் முதல் ரூ.1468 ஆக உயர்ந்துள்ளது.

இதன்மூலம் வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.48 அதிகரித்து இருக்கிறது. இந்த விலை உயர்வுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. #CookingGas
Tags:    

Similar News