செய்திகள்

கண்ணமங்கலத்தில் மாயமான மாணவன் சென்னையில் மீட்பு

Published On 2018-08-01 12:19 GMT   |   Update On 2018-08-01 12:19 GMT
கண்ணமங்கலத்தில் பள்ளிக்கு செல்லவதாக கூறிவிட்டு சென்ற மாணவன் சென்னையில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கண்ணமங்கலம்:

சென்னை அய்யப்பாக்கம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவன், அய்யப்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் சரியாக படிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அவரது தந்தை கண்ணமங்கலம் துரிஞ்சிக்குப்பம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படிக்க வைக்க அங்கு அழைத்து வந்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த ஜூன் மாதம் அவனை சேர்த்தார்.

இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சந்தவாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் மாணவனை தேடி வந்தனர். அப்போது சென்னையில் உள்ள நண்பர் வீட்டில் மாணவன் தங்கியிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், அங்கு சென்று மாணவனை மீட்டு வந்தனர். போலீஸ் விசாரணையில், சென்னையில் வசிக்கும் தனது பெற்றோரை பார்க்க சென்றபோது கதவு பூட்டி இருந்ததால் நண்பர் வீட்டில் தங்கி இருந்ததாக மாணவன் கூறினான். பின்னர் மாணவனை, அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். #tamilnews
Tags:    

Similar News