ஈரோடு அருகே ஓடும் பஸ்சில் செல்போன் அபேஸ் - வாலிபர் சிக்கினார்
ஈரோடு:
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 19). அரவிந்த இன்று காலை 7 மணி அளவில் தனது நண்பருடன் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்தார்
ஈரோடு பஸ் நிலையத்திலிருந்து பன்னீர்செல்வம் பார்க்கிற்கு செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறினர் பஸ் சவிதா வளைவில் திரும்பியபோது அரவிந்த் பின்னால் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென அரவிந்த் பையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓடினார்
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அரவிந்த் மற்றும் அவரது நண்பர் திருடன் திருடன் என கத்தினர் உடனடியாக பஸ்சை டிரைவர் நிறுத்தினார் தப்பி ஓடிய வாலிபரை அந்த வழியாக வந்த பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வாலிபரை அழைத்து கொண்டு டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர் போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் பெயர் சிவானந்தன் (வயது 27) என்பதும் சேலம் மேட்டூர் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது .
அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிவா ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்