செய்திகள்

கும்பகோணத்தில் மீன் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-07-27 16:27 IST   |   Update On 2018-07-27 16:27:00 IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் மீன் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கும்பகோணம்:

கும்பகோணத்தில் ஒருங்கிணைந்த மீன் வியாபாரிகள், தந்தை பெரியார் மீன் அங்காடி அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு மீன் கமி‌ஷன் ஏஜெண்டுகள் முருகன், ரசீது, ஜெய்லானுதீன், சாகுல் ஹமீது ஆகியோர் தலைமை வகித்தனர். 

கும்பகோணம் வர்த்தக சங்க தலைவர் கே.எஸ்.சேகர், வக்கீல் ஆனந்த், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் மீன் வியாபாரிகளுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்க வேண்டும். பொது இடங்களில் பெண்கள் சுகாதாரமின்றி மீன்கள் விற்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.

பின்னர் மீன் மார்க்கெட் முன்பு இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிறகு சப்- கலெக்டர் பிரதீப்குமார், நகராட்சி ஆணையர் உமா மகேஸ்வரி, நகர்நல அலுவலர் பிரேமா ஆகியோரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Tags:    

Similar News