செய்திகள்
மேட்டூர் அருகே வாலிபர் கொலை - நாமக்கல் கோர்ட்டில் 5 பேர் சரண்
மேட்டூர் அருகே வாலிபர் கொலையில் தொடர்புடைய 5 பேர் இன்று மதியம் நாமக்கல் மாவட்ட 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமயந்தி முன்னிலையில் சரண் அடைந்தனர்.
நாமக்கல்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக் கூடல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் கண்ணன் (வயது 30). திருமணமாகவில்லை.
கடந்த 23-ந்தேதி இரவு இவர் கருமலைக்கூடல் அடுத்த கருப்பு ரெட்டியூரில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் அமர்ந்து சிலருடன் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வைத்து அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் கண்ணனை கத்தியால் பின் தலை உள்பட பல இடங்களில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய 5 பேர் இன்று மதியம் நாமக்கல் மாவட்ட 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமயந்தி முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் கருமலைக் கூடலை சேர்ந்த மகேந்திரன், பிரசாத், செந்தில்குமார் என்கிற ஆறுமுகசாமி, மணி என்கிற மோகன்ராஜ், அழகு என்கிற தம்பிதுரை ஆகியோர் என்பது தெரியவந்து. சரண் அடைந்த இவர்கள் 5 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக் கூடல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் கண்ணன் (வயது 30). திருமணமாகவில்லை.
கடந்த 23-ந்தேதி இரவு இவர் கருமலைக்கூடல் அடுத்த கருப்பு ரெட்டியூரில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் அமர்ந்து சிலருடன் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வைத்து அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் கண்ணனை கத்தியால் பின் தலை உள்பட பல இடங்களில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய 5 பேர் இன்று மதியம் நாமக்கல் மாவட்ட 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமயந்தி முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் கருமலைக் கூடலை சேர்ந்த மகேந்திரன், பிரசாத், செந்தில்குமார் என்கிற ஆறுமுகசாமி, மணி என்கிற மோகன்ராஜ், அழகு என்கிற தம்பிதுரை ஆகியோர் என்பது தெரியவந்து. சரண் அடைந்த இவர்கள் 5 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.