செய்திகள்

பள்ளி மாணவியை ஈவ்டீசிங் செய்த சிறுவன்: தட்டிகேட்ட தந்தைக்கு கொலைமிரட்டல்

Published On 2018-07-18 15:50 GMT   |   Update On 2018-07-18 15:50 GMT
கவுந்தப்பாடி அருகே பள்ளி மாணவியை ஈவ்டீசிங் செய்த சிறுவனை தட்டிகேட்ட தந்தைக்கு அந்த சிறுவன் கொலை மிரட்டல் விடுத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுந்தப்பாடி:

கவுந்தப்பாடி அருகே உள்ள பேராயூர் பகுதியில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி தனது வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கு நடந்து சென்று வருகிறார். அப்போது அந்த மாணவியை செல்லக்குட்டி பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் கேலி கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த மாணவி தனது தந்தையிடம் கூறினார். இதையடுத்து மாணவியின் தந்தை அந்த சிறுவனை பள்ளிக்கு செல்லும் தனது மகளை கேலி கிண்டல் செய்து குறும்பு செய்ததை தட்டிகேட்டார்.

அதற்கு அந்த சிறுவன் மாணவியின் தந்தையை தகாத வார்த்தையால் திட்டி உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்தானாம். இதையடுத்து மாணவியின் தந்தை கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தார். அந்த மாணவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பிறகு அவரை ஈரோடு சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி வழக்கை விசாரித்து கோவை சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு சிறுவனை அனுப்பி வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் அந்த சிறுவன் அங்கு அனுப்பி வைக்கப்பட்டான். #tamilnews
Tags:    

Similar News