செய்திகள்

சிவகங்கையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

Published On 2018-07-17 13:13 GMT   |   Update On 2018-07-17 13:13 GMT
சிவகங்கை பழைய அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் லதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சிவகங்கை:

பேரணி பழைய அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வந்தடைந்தது.

பேரணியில் கல்லூரி மாணவிகள் “இரண்டிற்கு மேல் எப்பொழுதும் வேண் டாம்”, “குடும்ப நலம் நாட்டின் நலம்”, “பெண் கள் நலம் நாட்டின் நலம்”, “சிறு குடும்பம் சீரான குடும்பம்”, “இரண்டு குழந்தைகளுக்கு மூன்று ஆண்டுகள் இடைவெளி தேவை”, “பெண் சிசுவை காப்பாற்றுவோம்” என்ற பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

பின்னர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மக்கள் தொகை பெருக்கம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில் மாவட்ட குடும்பநலத் திட்டத்தில் சாதனை புரிந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் உலக மக்கள் தினத்தையொட்டி சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியளவிலும், சிவகங்கை மன்னர் மேல் நிலைப்பள்ளி அளவிலும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News