செய்திகள்
சேலம் பெரியபுதூரில் காரை அடித்து உடைத்த வக்கீல் கைது
சேலம் பெரியபுதூரில் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் அவரது காரை அடித்து உடைத்த வக்கீல் கைது செய்யப்பட்டார்.
சேலம்:
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் இளமாறன் (வயது 41). வக்கீலான இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவருக்கும் நேற்றிரவு தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த இளமாறன், ராஜேஷ்குமாரின் காரை அடித்து உடைத்தார்.
இது குறித்து ராஜேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த அழகாபுரம் போலீசார் இளமாறனை கைது செய்தனர்.