செய்திகள்

சங்கராபுரம் அருகே மணல் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்

Published On 2018-07-14 16:00 IST   |   Update On 2018-07-14 16:00:00 IST
சங்கராபுரம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் வரஞ்சரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வரஞ்சரம் போலீசார் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டனர்.

அப்போது வரஞ்சரம் அசகளத்தூர் பகுதியில் டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சங்கராபுரம் அருகே உள்ள மலைகோட்டாலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 20) என்பதும், அவர் டிராக்டரில் மணல் கடத்தியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணிகண்டனை போலீசார் கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பகண்டை பகுதியில் உள்ள ஆற்றில் டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்த ராயபுரம் பகுதியை சேர்ந்த டேவிட் (24) என்பவரை பகண்டை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News