செய்திகள்
வேலூரில் பலத்த காற்றுடன் மழை - அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த சிறுவன் பலி
வேலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் மழையின் போது மின்சார கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் மின்கம்பியை மிதித்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. கணியம்பாடி பகுயில் பலத்த காற்றில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
அமிர்தி அருகே உள்ள நஞ்சு கொண்டாபுரம் கிராமத்தில் தென்னை மட்டைகள் விழுந்ததில் விவசாய நிலத்தில் சென்ற மின் வயர்கள் அறுந்து விழுந்தன. அந்த கிராமத்தை சேர்ந்த ராஜவேலு மகன் இளவரசன் (16), மழை நின்றதும் அவரது விவசாய நிலத்துக்கு சென்றார்.
அப்போது அறுந்து கிடந்த மின்வயரில் மித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் இறந்தார். அவரது உடல் செடிகளுக்கு மத்தியில் கிடந்ததால் யாரும் பார்க்கவில்லை.
இளவரசன் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் இரவு பல இடங்களில் தேடினர். நண்பர்களிடம் விசாரித்தனர். இன்று காலை கணியம்பாடி மின் ஊழியர்கள் நஞ்சுகொண்டாபுரம் கிராமத்துக்கு சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
செடிகளுக்கு இடையே அறுந்து கிடந்த மின் கம்பியை தூக்கினர். அதனை தூக்க முடியவில்லை. அப்போது தான் இளவரசன் இறந்து கிடந்ததை கண்டனர். இந்த தகவல் அறிந்து வந்த இளவரசனின் பெற்றோர் உறவினர்கள் கதறி அழுதனர்.
வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. கணியம்பாடி பகுயில் பலத்த காற்றில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
அமிர்தி அருகே உள்ள நஞ்சு கொண்டாபுரம் கிராமத்தில் தென்னை மட்டைகள் விழுந்ததில் விவசாய நிலத்தில் சென்ற மின் வயர்கள் அறுந்து விழுந்தன. அந்த கிராமத்தை சேர்ந்த ராஜவேலு மகன் இளவரசன் (16), மழை நின்றதும் அவரது விவசாய நிலத்துக்கு சென்றார்.
அப்போது அறுந்து கிடந்த மின்வயரில் மித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் இறந்தார். அவரது உடல் செடிகளுக்கு மத்தியில் கிடந்ததால் யாரும் பார்க்கவில்லை.
இளவரசன் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் இரவு பல இடங்களில் தேடினர். நண்பர்களிடம் விசாரித்தனர். இன்று காலை கணியம்பாடி மின் ஊழியர்கள் நஞ்சுகொண்டாபுரம் கிராமத்துக்கு சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
செடிகளுக்கு இடையே அறுந்து கிடந்த மின் கம்பியை தூக்கினர். அதனை தூக்க முடியவில்லை. அப்போது தான் இளவரசன் இறந்து கிடந்ததை கண்டனர். இந்த தகவல் அறிந்து வந்த இளவரசனின் பெற்றோர் உறவினர்கள் கதறி அழுதனர்.
வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.