செய்திகள்

கோவையில் இன்று விபத்து- அரசு பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி

Published On 2018-07-05 11:54 GMT   |   Update On 2018-07-05 11:54 GMT
கோவையில் இன்று அரசு பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கன்னியாகுமரி மாவட்டம் சடைய நல்லூரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் நரேஷ் (20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

கோவை காந்தி புரத்தில் அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். நரேஷ் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார். கோவை -அவினாசி சாலை லட்சுமி மில் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது பீளமேடுக்கு அரசு பஸ் சென்றது. இந்த பஸ் திடீரென நரேஷ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் அவர் தவறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் சக்கரம் நரேஷ் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் நரேஷ் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து காரணமாக லட்சுமி மில் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நரேஷ் விபத்தில் பலியான சம்பவத்தை கேள்விப்பட்டதும் அவர் படித்து வந்த கல்லூரி மாணவர்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர். #Tamilnews
Tags:    

Similar News