செய்திகள்

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பயணியிடம் நகை திருட்டு

Published On 2018-07-04 12:28 GMT   |   Update On 2018-07-04 12:28 GMT
மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் நகை இருந்த கைப்பையை திருடிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை:

கும்பகோணம் அருகே உள்ள இன்னம்பூரைச் சேர்ந்தவர் குமார் (வயது 28). இவர் மனைவியுடன் மதுரை வந்திருந்தார். மீண்டும் கும்பகோணம் செல்வதற்காக இருவரும் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு வந்தனர்.

பஸ்சின் மேல் பகுதியில் பொருட்கள் வைக்கும் இடத்தில் கைப்பையை வைத்துவிட்டு பஸ்சுக்காக கீழே இறங்கி காத்திருந்தனர். கைப்பையில் 7 பவுன் நகை இருந்தது.

அப்போது பஸ்சில் ஏறிய மர்ம நபர் கைப்பையை நைசாக திருடிக் கொண்டு தப்பினான். இது குறித்து அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு இதே பாணியில் பஸ் பயணியிடம் நகை-பணம் இருந்த கைப்பை திருடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீசார் விழிப்புணர்வோடு இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News