செய்திகள்

திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2018-07-02 12:01 GMT   |   Update On 2018-07-02 12:01 GMT
திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகே செல்லமந்தாடி பகுதியில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை தொட்டியில் தண்ணீர் தேக்கி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு மாத காலமாகவே ஆள்துளை கிணற்றில் நீர் வற்றி விட்டதால் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இப்பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் மூலமும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. அந்த தண்ணீரும் சில நாட்களாக கிடைக்காததால் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொது மக்கள் இன்று திண்டுக்கல்-பழைய கரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த தாடிக்கொம்பு போலீசார் அவர்களிடம் சமரசம் பேசி விரைவில் குடிநீர் வினியோகம் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News