செய்திகள்

பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து மனு - மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

Published On 2018-06-28 08:28 GMT   |   Update On 2018-06-28 08:28 GMT
பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது. #ChennaiSalemGreenExpressway #EightLaneExpressway
சென்னை:

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார். மத்திய அரசின் 2013ம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், 8 வழிச் சாலைத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

நிலத்திற்கு உரிமையாளர் இலலாத ஒருவர் வழக்கு தொடர்ந்திருப்பது ஏற்புடையது அல்ல என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தன. மேலும், கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பை விட 3 முதல் 4 மடங்கு வரை கூடுதல் இழப்பீடு வழங்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு கருத்துக்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.  #ChennaiSalemGreenExpressway #EightLaneExpressway
Tags:    

Similar News